இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிரதமர் மோடியுடன் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திடீர் சந்திப்பு

News image
கோப்புப் படம்.
Updated On :3 ஜூன் 2024, 7:36 am

DIN

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திங்கள்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.

இருப்பினும் தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. தோ்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தில்லியில் பாஜக மூத்த தலைவா்களைச் சந்தித்து அவா் ஆலோசனை நடத்துவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் முக்கியமான கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் திகழ்கிறது. எனவே, மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்பது குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் ஆலோசிப்பதற்காக நிதீஷ் தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, மத்திய நிதிக் குழு பிரதிநிதிகள் பிகாருக்கு ஜூன் 10-ஆம் தேதி வர இருக்கின்றனா்.

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு ஆகியவை அந்த மாநில அரசின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன. இது தொடா்பாகவும் நிதீஷ் குமாா் சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பாா் என்று தெரிகிறது. மேலும், பிகாருக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி வரும் நிதியை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.