அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிக்கை.

News image
Updated On :3 ஜூன் 2024, 11:59 am

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஆட்சியர்களுடன் தொடர்புகொண்டு பேசியதாக முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவகாசம் கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் அதனை இன்று (ஜுன் 3) நிராகரித்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அதனை நிராகரித்து இன்று இரவு 7 மணிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

ஜுன் 1ஆம் தேதி இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தற்போது வரை 150 மாவட்ட ஆட்சியர்களிடம் அமித் ஷா பேசியுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (ஜுன் 1) பதிவிட்டிருந்தார்.

இதன்மூலம் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை பாஜக இழந்துள்ளது வெளிப்படையாக தெரிவதாகவும், யாருடைய அழுத்தத்துக்கும் அஞ்சாமல் அரசமைப்பை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளை மக்கள் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை அளிக்குமாறு ஜெய்ராம் ரமேஷிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியது.

இதற்கு ஒருவாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் இருந்து கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கால அவகாசம் கோரி தாங்கள் வைத்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும், இன்று (03.06.2024) இரவு 7 மணிக்குள், தாங்கள் வைத்த குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை /தரவுகளை பட்டியலிட்டு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தவறும் பட்சத்தில், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பிலிருந்து தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை என்று கருதப்படும் என்றும், இது தொடர்பாக ஆணையம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.