ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து: காங். பொதுச் செயலாளர்!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக உறுதி
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணியுடன் வெற்றிபெற்ற தெலுங்கு தேசக் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

2014இல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆந்திரப் பிரதேசத்திற்கு, 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக உறுதியளித்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால், அது 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு கூறினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நரேந்திர மோடி புனித நகரமான திருப்பதியில் வாக்குறுதியை மீண்டும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கான சிறப்பு வகை அந்தஸ்து கொள்கையை பாஜக ரத்து செய்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் 2024 தேர்தல் அறிக்கையில் டாக்டர்.மன்மோகன் சிங் வாக்குறுதியளித்தபடி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பதாக உறுதியளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com