ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஒவ்வொரு முறையும் அமித் ஷா சென்னைக்கு வர முடியுமா? டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி...

News image

அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன்.

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 10:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் சென்னைக்கு வந்து பேச முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பின் செய்தியாளர்களுடன் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,

"தேசிய ஜனநாயகக் கூட்டணி தில்லியில் பாஜக தலைமையிலான கூட்டணி. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி, இபிஎஸ் தலைமை வகிக்கிறார்.

பாஜக ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் சென்னைக்கு வந்து பேச முடியாது. இபிஎஸ், அமித் ஷாவிடம் பேசினார். தொகுதிகள் குறித்துப் பேசியிருக்கலாம்.

நாங்கள் அமித் ஷாவிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. பிகாரில் தேர்தலை எதிர்கொண்டு பாஜகவினர் எப்படி வெற்றி பெற்றார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒற்றுமையுடன் தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து பேசினோம்.

நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.

நாங்கள் தில்லிக்கு வந்தாலே முதல்வர் பயப்படுகிறார். தில்லியுடன் சரியான புரிதல் இல்லாமல் அவர்களுடன் சண்டையிடும்போது தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நாங்கள் எப்படி மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத்தர முடியும்? 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 12 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு வழங்கி உள்ளது. தவறு செய்ததால்தான் தில்லியைக் கண்டு திமுக பயப்படுகிறது.

எங்கள் கூட்டணி முழுமையடைந்துவிட்டது. சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை. திமுகவிற்கு ஒரே மாற்று அதிமுக தலைமையிலான கூட்டணிதான்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.