நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமைச்சர்களுடன் அஜித் பவார் அவசர ஆலோசனை!

4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி.

News image

அஜித் பவார் (கோப்புப்படம்)

Updated On :6 ஜூன் 2024, 5:22 am

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களுடன் அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) 4-ல் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சி 8 தொகுதிகளில் வென்றுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அஜித் பவார் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் கட்சியின் அனைத்து அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக கூட்டணி தனித்து ஆட்சி அமைக்க முடியாததற்கு உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.