தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

மும்பை: ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்; அதிகாரி பணியிடை நீக்கம்

News image
Updated On :9 ஜூன் 2024, 3:12 pm IST

மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள இயக்கப்பட்ட விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27வது ஓடுபாதையில் நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்படும்போதே, அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரையிறங்கியது.

இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் அலட்சியமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும் அதேசமயம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானமும் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.