வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தைகளுக்கான இரண்டாவது இருப்பிடம் தயார்!

மத்தியப் பிரதேசத்தில் காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயத்தில் நடைபெற்று வந்த சிறுத்தைகளின் இருப்பிடத்துக்கான பணிகள் நிறைவு.

News image
Updated On :11 ஜூன் 2024, 9:05 pm IST

மத்தியப் பிரதேசத்தில் காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயத்தில் நடைபெற்று வந்த சிறுத்தைகளின் இருப்பிடத்துக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டத்தின்கீழ் கடந்த 2022 ஆம் ஆண்டு நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மேலும் 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்த சிறுத்தைகளின் பிரதான இருப்பிடமாக குனோ தேசிய பூங்கா பார்க்கப்பட்டது. இதற்கிடையில், சிறுத்தைகளுக்காக புதிய இருப்பிடம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயம் சிறுத்தைகளுக்கான இரண்டாவது இருப்பிடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயத்தில் நடைபெற்று வந்த சிறுத்தைகளின் இருப்பிடத்துக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: கென்யா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த குழுக்கள் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டு, சிறுத்தைகளை அங்கு விடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். அதன் பின்னர், பணிகள் தொடங்கப்பட்டது. காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்துவிட்டதாக முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தைகளுக்கான இரை விலங்குகள் கன்ஹா, சாத்புரா மற்றும் சஞ்சய் புலிகள் சரணாலயத்திலிருந்து காந்தி சாகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.

காந்தி சாகர் சரணாலயம், குனோ தேசிய பூங்காவிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.