டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 வீரர்கள் காயம்

ஜம்மு - காஷ்மீரில் ஒரே வாரத்தில் மூன்றாவது தாக்குதல்.

News image
Updated On :12 ஜூன் 2024, 4:48 am

DIN

ஜம்மு - காஷ்மீரில் மூன்றாவது முறையாக புதன்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் தாக்கியதில் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

தோடாவின் சத்திரகல்லா பகுதியில் அமைந்துள்ள ராணுவ சோதனைச் சாவடியின் மீது புதன்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், 5 ராணுவ வீரர்கள், ஒரு சிறப்புக் காவலர் காயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, தோடா பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று இரவு கதுவா பகுதியில் குடியிருப்புகளின் மீது இரு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

அதேபோல், ரெய்சி பகுதியில் பக்தர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுயாகமடைந்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் 3 முறை பயங்கராவதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ராணுவ வீரர்களின் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.