பாஜக செய்த பிரசாரத்தால்தான் மகாராஷ்டிரத்தில் தோல்வி: ஷிண்டே

அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம், இடஒதுக்கீடு ரத்து அச்சத்தால் தோல்வி.
பாஜக செய்த பிரசாரத்தால்தான்  மகாராஷ்டிரத்தில் தோல்வி: ஷிண்டே
ANI
Updated on
1 min read

பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரசாரம் மகாராஷ்டிரத்தில் சில தொகுதிகளை இழக்க காரணம் என்று சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிண்டே பேசியதாவது:

“எதிர்க்கட்சியினரின் தவறான பிரசாரத்தால் சில தொகுதிகளை நாங்கள் இழந்தோம். மகாராஷ்டிரத்தில் எங்கள் கூட்டணி பாதிப்பை சந்தித்தது.

400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தது, மக்களிடையே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போகிறார்கள் என்றும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றும் அச்சம் நிலவியது.” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, மத்திய அமைச்சரவையில் 7 மக்களவை உறுப்பினர்களை கொண்ட சிவசேனைக்கு கேபினேட் பதவி வழங்காமல், ஒரு எம்பியை கொண்ட கட்சிக்கெல்லாம் கேபினேட் பதவி கொடுத்துள்ளதாக ஷிண்டே அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அதேபோல், அஜித் பவார் தரப்பினரும் மத்திய இணையமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டனர்.

பாஜக செய்த பிரசாரத்தால்தான்  மகாராஷ்டிரத்தில் தோல்வி: ஷிண்டே
இணை அமைச்சர் பதவிதானா? ஷிண்டே சிவசேனையும் அதிருப்தி!

இந்த நிலையில், ஷிண்டேவின் பேச்சு மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து ஷிண்டே விலகினால் மகாராஷ்டிரத்தில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும்.

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் பாஜக 9, ஷிண்டே அணி 7, அஜித் பவார் அணி ஒரு இடத்தை மட்டுமே வென்றிருந்தனர். இந்தியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com