கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுகாதாரமற்ற நீரால் ஊர்மக்கள் பலி!

கர்நாடகத்தில், சுகாதாரமற்ற நீரின் பயன்பாட்டினால் அப்பகுதி மக்கள் அவதி

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2024, 10:18 am

DIN

கர்நாடகத்தின் சின்னனஹள்ளி கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக அசுத்தமான தண்ணீரை குடித்து ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் இறந்துள்ளனர் மற்றும் பல குடியிருப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

"சின்னனஹள்ளியில் ஜூன் 9ஆம் தேதியில் ஒரு கோயிலில் லட்சுமிதேவி மற்றும் கெம்பண்ணாதேவி தெய்வங்களின் வாராந்திர மற்றும் வருடாந்திர கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜூன் 10ஆம் தேதியில் இந்த கண்காட்சியின் போது, அப்பகுதிமக்களுக்கு மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டதால், அப்பகுதியினர் கிட்டத்தட்ட நூறு பேர் நோய்வாய்ப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கினால் அனுமதிக்கப்பட்டும், மேலும் ஹனுமக்கா (85) என்ற ஒரு வயதான பெண்ணும் உயிரிழந்தார். ஜூன் 11ஆம் தேதியில் நாகம்மா (89) மற்றும் நாகப்பா (85) என்ற இரண்டு பெரியவர்களும், மூன்று வயது சிறுமி மீனாட்சியும் இறந்துள்ளனர். நேற்று (ஜூன் 12) சிக்காதசப்பா (76) மற்றும் பெடண்ணா (74) ஆகிய இரண்டு முதியவர்கள் மாவட்ட பொது மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

இன்று (ஜூன் 13) உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அவருடன் துணை ஆணையர் சுபா கல்யாண் மற்றும் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஸ்கர் பேக் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.வும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.என். ராஜண்ணாவும் உடன் சென்றனர்.

பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் மாசுபட்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்குவது தான் இதற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஊராட்சி வளர்ச்சி அலுவலர் பி.வி. முனிராஜு மற்றும் நீர்வள மேலாளர் எஸ். நாகராஜு ஆகியோர் கடமையில் அலட்சியம் செய்ததாக கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதி மக்களிடம், மேல்நிலை தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.