ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உத்தரப் பிரதேசத்தில் பணத்திற்காக தாயைக் கொன்ற மகன் கைது!

பணத்திற்காக தாயைக் கொன்று புதைத்த மகன் கைது

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூன் 2024, 7:35 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் சொத்திற்காக தாயைக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் எடா மாவட்டத்தில், 50 வயதான சீமா தேவி என்பவர் சில நாள்களாகக் காணவில்லையென, சீமா தேவியின் வளர்ப்பு மகன் ஹர்பால் காவல்துறையில் புகார் அளித்தார். ஹர்பால் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், சீமா தேவியின் மகனான ராமசங்கர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ராமசங்கரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்தான் சீமா தேவியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ராமசங்கர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது, சீமா தேவி அவரது நிலத்தை விற்க முயன்றுள்ளார். நிலத்தை விற்றபின், அதன்மூலம் கிடைக்கின்ற பங்குகளில், தனக்கு பங்கு தரமாட்டார் என்று ராமசங்கர் நினைத்துள்ளார். இதனால் தான் ராமசங்கரும், அவரது நண்பர்களான ராம் பாபு மற்றும் நீரஜ் ஆகிய மூவரும் சேர்ந்து, சீமா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்ததுடன் சீமா தேவியின் உடலை புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ராமசங்கர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், கொலையில் தொடர்புடைய ராமசங்கரின் நண்பர்கள் இருவரையும் தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.