தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

ஒடிசாவில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஒடிசாவின் 17 சட்டப்பேரவையின் உறுப்பினர்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

News image
Updated On :18 ஜூன் 2024, 1:12 pm IST

ஒடிசாவின் 17 சட்டப்பேரவையின் உறுப்பினர்களாக முதல்வர் மோகன் சரண் மாஜீ, துணை முதல்வர்கள் கேவி சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா மற்றும் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வர் மற்றும் பிஜேடி தலைவர் பட்நாயக் உள்ளிட்ட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு ஒடிசாவின் தற்காலிக சபாநாயகர் ரனேந்த பிரதாப் ஸ்வைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டக எம்எல்ஏக்களின் பதவிப்பிரமாணம் இன்றும், நாளையும் நிகழும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மக்களவைத் தலைவருக்கான தேர்தல் ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மரபுப்படி மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபி (78) தொகுதிகளிலும், பிஜேடி (51), காங்கிரஸ் (14), சிபிஎம் (1) மற்றும் சுயேட்சைகள் (3) ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றது.

147 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா பேரவையில், 82 பேர் முதல் முறையாக எம்எல்ஏக்களாக உள்ளனர்.

பிஜேடி தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.