ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்பு எரிபொருள்; இப்போது தண்ணீர் கட்டணம்: பெங்களூரு சந்திக்கும் விலை உயர்வுகள் ஏன்?

பெங்களூருவில் தண்ணீர் கட்டண உயர்வு? காங்கிரஸ் அரசின் முடிவு என்ன..

News image
டி.கே.ஷிவகுமார்- ஐஏஎன்எஸ்
Updated On :19 ஜூன் 2024, 10:47 am

DIN

கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயர்வையடுத்து காங்கிரஸ் அரசு பெங்களூரு நகரத்தில் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த ஆலோசித்துவருகிறது.

துணை முதல்வர் டி.கே.ஷிவகுமார், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் தங்களுக்கு வேறு வழி இல்லையெனவும் புதன்கிழமை பேசியுள்ளார்.

இதுதொடர்பாக ஷிவகுமார் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

நாங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகிறோம். புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூரு குடிநீர் பகிர்மானம் மற்றும் கழிவு அகற்ற வாரியத்துக்கு எந்த வங்கியும் பொருளாதார ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

10 முதல் 15 நாள்களில் காவேரி திட்டத்தின் 5-வது கட்டம் முடிவடைந்துவிடும். தண்ணீருக்கு செலவாவதில் 70 சதவிகிதம் மின்சாரம் மற்றும் தொழிலாளர் கூலிக்கு செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே வேறு வழியில்லை. வாரியத்தை நிலைநிறுத்த சாத்தியமானவற்றை முயற்சித்து வருகிறோம்.

உலக வங்கிகளும் பொருளாதார ஆணையங்களும் நாங்கள் இந்த சிக்கலை எதிர்கொள்வதில் அரசியல் செய்வதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இதனை தீர்க்க முயற்சிக்கவில்லை.

நீர் பகிர்மான அமைப்பை விரிவாக்க வேண்டும். ஆறு டிஎம்சி நீர் பெங்களூருவுக்கு திறக்க ஆணையிட்டுள்ளேன். இன்னொரு கட்டப் பணியும் மீதமுள்ளது. பெங்களூரு குடிநீர் வாரியம் தனி நிறுவனம் எனவும் அது சார்பற்று செயல்படுவதை காட்டவும் வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தண்ணீருக்கான கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.