குர்பானி படங்களைப் பகிர்ந்ததால், முஸ்லிம் ஒருவரின் துணிக்கடையைச் சூறையாடிய இந்து சமூகத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சம்பவத்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் நஹான் பகுதியில், ஜாவேத் என்பவர் துணிக்கடை நடத்தி வந்துள்ளார். முஸ்லிமான ஜாவேத், பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி புகைப்படங்களை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தார். இந்தப் படத்தில் மாட்டிறைச்சியுடன் இருப்பது போன்று பதிவிடப்பட்டிருந்தது.
ஜாவேத்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸைப் பார்த்த இப்பகுதி மக்கள், ஒன்றுகூடி, ஜாவேத் நடத்திவரும் துணிக்கடையில் நுழைந்து, கடையில் உள்ள துணிகளை வெளியில் வீசியும், பொருள்களை அடித்து உடைத்தும் உள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, காவல்துறை அதிகாரிகள் சிலர் அங்கிருப்பதும் விடியோவில் தெரிகிறது. பின்னர், காவல்துறையினர் அப்பகுதி மக்களை அப்புறப்படுத்துவதும், ஜாவேத்தின் கடையை மூடுவதும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியிலிருந்து 279 போ் ஹஜ் பயணம்! முஸ்லிம் இலக்கிய மன்றம் சாா்பில் வழியனுப்பும் விழா!

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

திமுக கூட்டணியே வெற்றி பெறும்: கே.எம். காதா் மொகிதீன்

வாகனத்தை நிறுத்தியதில் தகராறு: வீடு சூறை; 7 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

