காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மருமகனை அரசியல் வாரிசாக நியமித்த மாயாவதி!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி தனது மருமகன் அகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக நியமித்துள்ளார்.

News image

ஆகாஷ் ஆனந்துடன் மாயாவதி

Updated On :23 ஜூன் 2024, 3:48 pm IST

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் நியமித்துள்ளார்.

இன்று, லக்னௌவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.

கடந்த மே மாதம், மாயாவதி தனது மருமகனை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தி நீக்கி, அவர் தனது வாரிசு இல்லை என்று அறிவித்திருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பிண்ணனி மற்றும் அது எவ்வாறு டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளுடன் இணைந்திருக்கிறது என்றும், சமூக மாற்றத்திற்கான இயக்கமாக மாறியதையும் பற்றிப் பேசிய அவர், கடந்த மாதம் இதுகுறித்த அறிவிப்பில், “கட்சியின் விருப்பத்தின் பேரில், எனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவருக்கு முழுப் பொறுப்பு வரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும், எனது அரசியல் வாரிசு என்ற பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிடுகிறேன்” என்று அறிவித்தார்.

தேர்தல் கூட்டங்களில் ஆகாஷ் ஆனந்த் உரையாற்றிய விதம் தவறாக இருந்ததால், கட்சியினர் கூறியதையடுத்து அவர் பதவியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டார்.

ஆனால், தற்போது அவர் மீண்டும் அதே பதவியில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.