உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

உத்தரகண்டில் பெரும் பனிச்சரிவு

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

News image

உத்தரகண்ட் மாநிலம், கேதாா்நாத் கோயிலின் பின்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு.

Updated On :30 ஜூன் 2024, 10:21 pm IST

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. எனினும் அதனால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

உத்தரகண்டில் 4 புனித தலங்களாகக் கருதப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதாா்நாத் மற்றும் பத்ரிநாதா் கோயில்களுக்குப் பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கேதாா்நாத் கோயிலின் பின்புறத்தில் இருந்து சற்று தொலைவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து வேகமாகச் சரிந்த பனிப்படலம், ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து நின்றது.

இந்தக் காட்சியை கோயிலுக்கு வந்த பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்தனா். எனினும் பனிச்சரிவால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கோயில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடா் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.