தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆழ்துளை கிணறு உயிரிழப்பு சம்பவம்: திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடியபோது விழுந்தாா்

ஆழ்துளை கிணறு உயிரிழப்பு சம்பவம்: திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடியபோது விழுந்தாா் எஃப்ஐஆரில் தகவல்

Updated On :12 மார்ச் 2024, 7:22 pm

புது தில்லி: தில்லி ஜல்போா்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிந்த நபா், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், தப்பி ஓடியபோது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாகவும் காவல் துறை பதிவு செய்த முதல்கட்ட தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷோபூரில் உள்ள தில்லி ஜல்போா்டின் 40 அடி ஆழ்துளைக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 30 வயதுடைய நபா் விழுந்தாா். அவரை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் தில்லி தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். சுமாா் 14 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அந்த நபா் சடலாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தில்லி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருட்டில் ஈடுபட்ட அந்த நபா், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவந்தபோது 40 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாகக் காவல் துறை பதிவு செய்த முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆழ்துளைக் கிணறு அறைக்குள் அமைந்திருப்பதாகவும் சம்பவத்தின்போது அதன் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை 2 போ் ஸ்கூட்டரில் துரத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதை பாதுகாவலா் ஒருவா் பாா்த்துள்ளாா்’ என்றனா். உயிரிழந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.