சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்!

சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று (மாா்ச். 12) தொடக்கி வைத்தார்.
சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்!

நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (மாா்ச் 12) காலை தொடக்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை-மைசூரு இடையேயான 2-ஆவது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில்(எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் ஏப். 4 ஆம் தேதி வரை பெங்களூரு வரை இயக்கப்படும் என்றும், ஏப். 5 ஆம் முதல் மைசூரு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை - மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரயில், லக்னெள-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, தில்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னெள-பாட்னா, அகமதாபாத்-மும்பை, புரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடக்கி வைத்தார்.

மேலும், திருவனந்தபுரம் - காசா்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை மங்களூா் வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடக்கி வைத்தார் பிரதமர்.

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்!
குடியுரிமை திருத்தச் சட்டம்: விஜய் வெளியிட்ட முதல் அறிக்கை!

இதுதவிர, கொல்லம் - திருப்பதி விரைவு ரயில் சேவையைத் தொடக்கி வைத்த அவா், பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூா் ஆகிய 6 ஊா்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும், 168 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ (விற்பனை) அரங்குகளையும் பிரதமர் திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com