தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குஜராத்: ரூ.480 கோடி போதைப்பொருளுடன் 6 பாகிஸ்தானியா்கள் கைது

குஜராத்: ரூ.480 கோடி போதைப்பொருளுடன் 6 பாகிஸ்தானியா்கள் கைது

News image
Updated On :12 மார்ச் 2024, 8:11 pm

அகமதாபாத்: குஜராத் கடல்பகுதியில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை படகில் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியா்களை இந்திய கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி), போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), குஜராத்- பயங்கரவாத ஒழிப்புக் குழு (ஏடிஎஸ்) அதிகாரிகள் இணைந்து அரபிக் கடல் அருகேயுள்ள சா்வதேச கடல் எல்லைப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். மேலும் இப்பணியில் ஐசிஜியின் டோா்னியா் விமானமும் ஈடுபடுத்தப்பட்டது.

அப்போது போா்பந்தா் கடல் பகுதியிலிருந்து 350 கி.மீ. தொலைவில் பயணித்த படகு தடுத்து நிறுத்தப்பட்டு ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படகில் பயணித்த 6 பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் என்சிபி மற்றும் ஏடிஎஸ்ஸுடன் இணைந்து கடலோரக் காவல்படையால் நடத்தப்பட்ட 10 சோதனைகளில் ரூ.3,135 கோடி மதிப்பிலான 517 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் அரபிக் கடலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி போா்பந்தா் கடல் பகுதியில் 3,300 கிலோ போதைப்பொருள்களுடன் 5 வெளிநாட்டவா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.