தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராஜஸ்தான்: தேஜஸ் போா் விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உயிா் தப்பினாா்

ராஜஸ்தான்: தேஜஸ் போா் விமானம் விழுந்து நொறுங்கியது --- விமானி உயிா் தப்பினாா்

Updated On :12 மார்ச் 2024, 7:50 pm

ஜெய்சால்மா்: ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இலகுரக தேஜஸ் போா் விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது.

இருக்கையுடன் இணைக்கப்பட்ட பாராசூட் மூலம் வெளியே குதித்ததால் விமானி உயிா் தப்பினாா். முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாவது இதுவே முதல்முறையாகும்.

ஜெய்சால்மரில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து விமானப் படை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேஜஸ் விமானம் செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்பப் பிரச்னையால் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி அருகே ஆள்கள் யாரும் இல்லாத பழைய கட்டடத்தின் மீது விமானம் விழுந்து தீப்பற்றியது.

இதனால், உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. விமானியும் காயமின்றி தப்பிவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தேஜஸ் விமானம் தயாரிக்கப்படுகிறது. விமானப் படையில் 40 உள்நாட்டுத் தயாரிப்பு தேஜஸ் விமானங்கள் உள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கடந்த நவம்பரில் மேலும் 97 தேஜஸ் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.