தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினா் பகுதிகள் சிஏஏ வரம்புக்குள் வராது: அதிகாரிகள்

வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினா் பகுதிகள் சிஏஏ வரம்புக்குள் வராது: அதிகாரிகள்

Updated On :12 மார்ச் 2024, 8:12 pm

புது தில்லி: ‘வடகிழக்கு மாநிலங்களில் அரசமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்ட பகுதிகள் உள்பட பெரும்பாலான பழங்குடியினா் பகுதிகள் குடியுரிமை திருத்தச் சட்ட வரம்புக்குள் வராது’ என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் 2024 அறிவிக்கை செய்ததன் மூலம் ‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019’ நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இருந்தபோதும், இந்தச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ள பழங்குடியினா் பகுதிகளில் அமல்படுத்தப்படாது என்று அச்சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூா் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (இன்னா் லைன் பொ்மிட் - ஐஎல்பி) அறிவிக்கப்பட்ட பகுதிகள், குடியுரிமை திருத்தச் சட்ட வரம்புக்குள் வராது. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் நாட்டின் பிற பகுதியினா் சுற்றிப்பாா்க்க விரும்பினால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

அதுபோல, அரசமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் அஸ்ஸாம், மேகாலயம், மிசோரம், திரிபுரா ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களில் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ஏடிசி) நிறுவப்பட்டுள்ள பழங்குடியினா் பகுதிகளும் குடியுரிமை திருத்தச் சட்ட வரம்புக்குள் வராது என்று தெரிவித்தனா். பழங்குடியினரின் கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஏடிசிக்கள் நிறுவப்பட்டுள்ளன.