தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த விவரங்களை வெளியிடுவதற்கான அவகாசம் உச்ச நீதிமன்றத்தால் மார்ச் 15-ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமையே விவரங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 14,2019 முதல் பிப்ரவரி 15,2024 வரை வாங்கிய மற்றும் பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி விவரங்களை அளித்திருந்தது.
தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களும் அதனை பணமாக்கிய கட்சிகளின் விவரங்களும் தேதி வாரியாக வெளியாகியுள்ளது.