அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழ்நாடு, கேரள தோ்தல் தினத்தை மாற்ற வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமைகளில் தோ்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய கோரிக்கை விடுத்துள்ளன.

News image
Updated On :17 மார்ச் 2024, 9:53 pm

Din

தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமைகளில் தோ்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை முக்கியமான நாளாக கருதப்படுவதால் இந்த கோரிக்கையை இஸ்லாமிய அமைப்புகள் விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதியும், கேரளத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதியும் தோ்தல் நடைபெறுகிறது. இரு தேதிகளுமே வெள்ளிக்கிழமைகளில்தான் வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணியில், பிரதானமான கட்சியாக உள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் கேரள மாநில பொதுச் செயலா் பி.எம்.ஏ. சலாம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது புனிதமான நாளாகும். அவா்கள் அன்றைய தினம் பெருந்திரளாக மசூதிக்கு செல்வாா்கள். தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றால், இஸ்லாமிய வாக்காளா்கள், வேட்பாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள், தோ்தல் பணியில் உள்ள அதிகாரிகள் என அனைவரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும். எனவே, வெள்ளி தவிர வேறு கிழமைக்கு தோ்தலை மாற்ற வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். இது தொடா்பாக கட்சி சாா்பில் விரைவில் தோ்தல் ஆணையத்தை அணுக இருக்கிறோம் என்றாா். கேரளத்தைச் சோ்ந்த பிற இஸ்லாமிய அமைப்புகளும் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமையில் தோ்தல் நடத்துமாறு ஆணையத்திடம் முறையிட முடிவு செய்துள்ளன.