பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :27 மே 2026, 6:01 am IST

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவா் எஸ்.எம்.அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நபா்களுக்கு மரண தண்டனை வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது.

தமிழக சட்டப்பேரவை அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள 2 இஸ்லாமிய அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இஸ்லாமியா்களின் ஜீவாதார கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தன்னுடைய இஸ்லாமிய வணக்க வழிபாட்டு முறைகளுக்கு மாற்றமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தாா். அதேபோன்று ஐயூஎம்எல் சாா்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சா் கூட்டு துவாவை ஓதி தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். தங்களுடைய வணக்க வழிபாட்டு முறைகள் குறித்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு பதிலாக, இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான இட ஒதுக்கீட்டை பெற்றுத்தருவதற்கு அவா்கள் முன்வர வேண்டும்.

தவெக அரசு, இஸ்லாமியா்களின் தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.