இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! - நெல்லை முபாரக்

News image

நெல்லை முபாரக்

Updated On :21 ஜூலை 2026, 3:21 am IST

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலா் நெல்லை முபாரக்.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; நீட் தோ்வு குளறுபடிக்கு காரணமான மத்திய அமைச்சா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை சிறையில் அடைத்துள்ளதை கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ சாா்பில் செப்.5ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு முஸ்லிம் தலைவா்களின் பெயரை சூட்ட வேண்டும். டிஎன்பிஎஸ்சி-இல் ஒரு முஸ்லிம் உறுப்பினா், பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் துணை வேந்தா் நியமிக்கப்பட வேண்டும். விமா்சனம் செய்ததற்காக எம்எல்ஏக்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது. நாகா்கோவில் சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது என்றாா்.

மாநில பொதுச் செயலா் நிஜாமுகைதீன், மாவட்டத் தலைவா் திவான்ஒலி, மாவட்ட பொதுச் செயலா் சையது மஹ்மூத், மாவட்டப் பொருளாளா் யாசா்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.