மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஹோலி பண்டிகை: அலிகாரில் 2 மசூதிகளை தார்ப்பாய்கள் மூலம் மூடிய காவல்துறையினர்

ஹோலி பண்டிகை: அலிகாரில் 2 மசூதிகளை தார்ப்பாய்கள் மூலம் மூடிய காவல்துறையினர் #holifestival

News image
Updated On :24 மார்ச் 2024, 4:54 pm IST

வண்ணங்களைத் தூவுவதைத் தவிர்ப்பதற்காக அலிகாரில் இரண்டு மசூதிகளை தார்ப்பாய்கள் மூலம் காவல்துறையினர் மூடியுள்ளனர்.

ஹோலி என்றால் வண்ணம், ஹோலி என்றால் உற்சாகம். வட மாநிலங்களில் மதுரா, வாராணசி போன்ற இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. நாடு முழுவதும் வெகு விமரிசையாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலிகா எனும் அரக்கி தீயில் அழிந்த புராணத்தை நினைவுகூரும் வகையிலும், வசந்த காலத்தை வரவேற்கும் வகையிலும் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையின் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் வண்ணங்களைத் தூவுவதைத் தவிர்ப்பதற்காக அலிகார் நகரத்தில் உள்ள குறைந்தது இரண்டு மசூதிகள் தார்ப்பாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளதாக காவல்துறைனிர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இவ்வாறு மூடப்பட்ட மசூதிகளில் ஒன்றுசப்ஜி மண்டி பகுதியில் உள்ள ஹல்வாய்யன் மசூதியும், மற்றொன்று தில்லி கேட் பகுதியில் அமைந்துள்ளதாகவும் அதிகாரி அபய் பாண்டே கூறியுள்ளார். மதத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், பழைய நகரப் பகுதிகளில் போலீஸ் தடுப்பு போடப்பட்டுள்ளதாகவும் பாண்டே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.