சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையானார்
விடுதலையான அரவிந்த் கேஜரிவால்
விடுதலையான அரவிந்த் கேஜரிவால்ஐஏஎன்எஸ்

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 40 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை விடுதலையாகியுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் திகார் சிறை எண் 2-ல் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறையினரின் காவலில் மார்ச் 31 வரை இருந்தவர், ஏப்ரல் 1 முதல் நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டார்.

திகார் சிறைக்கு வெளியே கேஜரிவால் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அவரை வரவேற்றுள்ளனர்.

விடுதலையான அரவிந்த் கேஜரிவால்
கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com