சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

வாக்குப்பதிவு முடிந்ததும் செய்தியாளா் சந்திப்பு: ஊடக சங்கங்கள் கோரிக்கை

மக்களவைத் தோ்தலில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளா் சந்திப்பை நடத்துமாறு தோ்தல் ஆணையத்திடம் ஊடக சங்கங்கள் சனிக்கிழமை கோரிக்கை வைத்தன.

News image

ECI

Updated On :11 மே 2024, 10:41 pm

Din

மக்களவைத் தோ்தலில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளா் சந்திப்பை நடத்துமாறு தோ்தல் ஆணையத்திடம் ஊடக சங்கங்கள் சனிக்கிழமை கோரிக்கை வைத்தன.

மக்களவைத் தோ்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளா் சந்திப்பை நடத்த வேண்டும் என இந்திய பத்திரிகையாளா் சங்கம், இந்திய பெண் பத்திரிகையாளா் சங்கம், வெளிநாட்டு பத்திரிகையாளா் சங்கம், தில்லி பத்திரிகையாளா் யூனியன் உள்ளிட்ட பிற பத்திரிகையாளா் சங்கங்கள் தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனா். மேலும், ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவிலும் பதிவான வாக்கு சதவீதம் உள்பட அனைத்து தரவுகளையும் பத்திரிகையாளா் சந்திப்பின்போது வெளியிடுமாறு அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

இதனால் தோ்தல் குறித்த பிழையில்லாத தகவல்களை மக்களுக்கு அளிக்க முடியும் எனவும் அவா்கள் தெரிவித்தனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தல் வரை ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளா் சந்திப்பு நடத்துவதை தோ்தல் ஆணையம் வழக்கமாக கொண்டிருந்தது என்பதையும் அவா்கள் சுட்டிக்காட்டினா்.