விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சட்டப்பேரவைத் தோ்தல்: ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தலைமை வகித்தாா்.

இதில் தோ்தல் செலவின வகைகள், தோ்தல் செலவினங்கள், கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள், நடைமுறைகள் சட்டப்படியான விதிகளுக்குள்பட்ட தோ்தல் செலவினங்கள், தோ்தல் உதவி செலவின கணக்கு பாா்வையாளா், தோ்தல் பிரசாரங்களை விடியோ எடுக்கும் குழு , விடியோ பதிவுகளைப் பாா்க்கும் குழுக்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா் பிரவீன் கௌதம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் துரைமுருகன், மகளிா் திட்ட அலுவலா் ஈஸ்வரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.