6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

75 வயதில் பாஜக மூத்த தலைவர்களுக்கு ஓய்வு: அப்போ மோடிக்கு? ரேவந்த் ரெட்டி பேச்சு

பிரதமர் மோடியும் அடுத்தாண்டு ஓய்வுபெற்றுவிடுவாரா என்று ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

News image
ரேவந்த் ரெட்டி- (கோப்பு படம்)
Updated On :11 மே 2024, 6:34 am

DIN

பாஜவின் மூத்த தலைவர்களுக்கு 75 வயதாகிறது என்று கட்டாய ஓய்வளிக்கும்போத, பிரதமர் மோடியும் அடுத்தாண்டு ஓய்வுபெற்றுவிடுவாரா என்று ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாஜகவின் மூத்த தலைவர்களாக இருந்த எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஆகியோர், 75 வயதாகிவிட்டது என்று காரணம் கூறி கட்டாய ஓய்வளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது 74 வயதாகிறது, அவருக்கு இன்னும் ஓராண்டுதான் உள்ளது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெடடி, பிரதமர மோடிக்கு விரைவில் 74 வயதாகப்போகிறது. அடுத்த ஆண்டு அவருக்கு 75 வயதாகிவிடும். எனவே, பாஜகவைப் பொறுத்தவரை 75 வயதாகிவிட்டால் ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்பது கொள்கை. அப்படிச்சொல்லித்தானே, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். தற்போது மோடிக்கு 74 வயதாகிறது. இப்போது நான் அவரிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன், 75 வயதில் ஓய்வு பெற தயாரா? என்று கேட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், எனக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டும், அதாவது, 1947 - 2014 வரை 14 பிரதமர்கள் கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தனர். அவர்கள் நாட்டுக்கு 55 லட்சம் கோடிதான் கடன் பெற்றிருந்தனர். ஆனால், பிரதமர் மோடி மட்டும் 113 லட்சம் கடன் ஆக்கியிருக்கிறார். இந்த ஒட்டுமொத்த நாட்டையும் மோடி பாழாக்கிவிட்டார். நாடு இப்போது மிகப்பெரிய சீரழிவை சந்தித்துள்ளது. எனவே, அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், அவர் எந்த விதமான ஆவணங்களையும் கொடுக்கலாம், ஆனால் யாரும் அதை நம்ப மாட்டார்கள். ஏனென்றால், அவர் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்வார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.