மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (மே 13) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தங்களது வாக்கினை செலுத்தினார்கள்.

நடிகர் அல்லு அர்ஜுன் வாக்களித்த பின் செய்தியாளர்களுடன் பேசினார். அவர் பேசும் போது, "தயவுசெய்து வாக்களிக்கவும். வாக்களிப்பது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பு. நம் வாழ்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மிக முக்கியமான நாள் இன்று. அதிக அளவிளான வாக்காளர்கள் வாக்களிக்க வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது.
நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை, அனைத்து கட்சிகளிடமும் நடுநிலையாக இருக்கிறேன்." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"May 4-வரைக் காத்திருப்பேன்!" வாக்களித்த பின் இயக்குநர் மிஷ்கின்!

மும்பைக்குக் குடியேறும் அல்லு அர்ஜுன்?
அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர்!

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


