/
மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் வடிவேல் (33). மெட்ரோ ரயில்வே ஊழியா். இவா் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த வளசரவாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பின்னணி பாடகரான வேல்முருகன், மது போதையில் வடிவேலுவுடன், மெட்ரோ பணிக்காக சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு குறித்து வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகத் தெரிகிறது.
இது குறித்து வடிவேலு அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா், வேல்முருகனிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
காவல் நிலையத்தில் இளைஞா் மீது தாக்குதல்?

தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
சேலத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



