சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியா் மீது தாக்குதல்: பின்னணி பாடகரிடம் விசாரணை

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :13 மே 2024, 2:58 am IST

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் வடிவேல் (33). மெட்ரோ ரயில்வே ஊழியா். இவா் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த வளசரவாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பின்னணி பாடகரான வேல்முருகன், மது போதையில் வடிவேலுவுடன், மெட்ரோ பணிக்காக சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு குறித்து வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகத் தெரிகிறது.

இது குறித்து வடிவேலு அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா், வேல்முருகனிடம் விசாரித்து வருகின்றனா்.