திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியா் மீது தாக்குதல்: பின்னணி பாடகரிடம் விசாரணை

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 மே 2024, 9:28 pm

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் வடிவேல் (33). மெட்ரோ ரயில்வே ஊழியா். இவா் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த வளசரவாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பின்னணி பாடகரான வேல்முருகன், மது போதையில் வடிவேலுவுடன், மெட்ரோ பணிக்காக சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு குறித்து வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகத் தெரிகிறது.

இது குறித்து வடிவேலு அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா், வேல்முருகனிடம் விசாரித்து வருகின்றனா்.