
மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 3 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பகல் 3 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 47.53 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 62.72 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 38.77 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
பிற மாநிலங்கள்:
உத்தர பிரதேசம் - 47.55%
பிகாா் - 45.33%
ஒடிஸா - 48.95%
ஜாா்க்கண்ட் - 53.90%
ஜம்மு-காஷ்மீா் - 44.90%
லடாக் யூனியன் பிரதேசம் - 61.26%
நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.