இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மோடி- அதானி ஊழல்: ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் விசாரணை! காங்கிரஸ் அறிவிப்பு!

அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல்: பாராளுமன்ற குழு விசாரணை, காங்கிரஸ் உறுதி

News image
கோப்புப் படம்
Updated On :22 மே 2024, 11:33 am

DIN

அதானி குழுமம், தரக்குறைவான நிலக்கரியை கூடுதல் விலைக்கு விற்று ஊழல் செய்ததாக பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்.

பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட குறிப்பில், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு விலை உயர்ந்த தூய்மையான எரிபொருள் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலக்கரி தரக்குறைவானதாக அதானி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்கள் ஒருங்கிணைந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு திட்டத்தினரால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுடுள்ளது.

ராகுல் காந்தி, இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில், அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையை அமைதியாக்க எத்தனை டெம்போக்களில் மோடி பணம் பெற்றார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக அதானி குழுமம் பதிலளிக்கவில்லை எனினும் முன்னதாக பலமுறை இதே குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட போது நிறுவனம் மறுத்துள்ளது.

காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமெஷ் வெளியிட்ட குறிப்பில், ஒருங்கிணைந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு திட்டத்தின் விசாரணையில் பல கப்பல்களில் தரக்குறைவான நிலக்கரி இந்தோனேஷியாவில் இருந்து தருவிக்கப்பட்டு அதிக விலைக்கு அதானியால் 2014-ல் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ரூ.3 ஆயிரம் கோடி கூடுதலாக அதானி இலாபம் பார்த்த வேளையில் மக்கள் காற்று மாசினாலும் மின்சார விலை உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும் எனவும் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் திரும்ப பெறப்படும் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.