ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

வாரணாசியில் பிரியங்கா காந்தி மற்றும் டிம்பிள் யாதவ் ரோடுஷோ!

News image
பிரியங்கா காந்தி மற்றும் டிம்பிள் யாதவ்- ஐஏஎன்எஸ்
Updated On :23 மே 2024, 5:58 am

DIN

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மற்றும் சமஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் வாரணாசியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு மே 25-ல் ரோடுஷோவில் பங்கேற்கவுள்ளனர்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் இந்தியா கூட்டணி வாரணாசி வேட்பாளருமான அஜய் ராய், “பிரியங்கா மற்றும் டிம்பிள் இணைந்து காசியில் மே 25 பொதுமக்கள் பேரணியில் பங்கேற்கின்றனர். அவர்கள் பெண்களின் பிரச்னைகள் குறித்து பேசவுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ரவிதாஸ் கோயிலில் வழிபட்ட பிறகு சீர் கோவர்தன் பகுதியில் இருந்து இரண்டு தலைவர்களும் பேரணியில் கலந்து கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மே 28 அல்லது 29 தேதிகளில் வாரணாசியில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான வாக்குப் பதிவு ஜுன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.