மக்களவையில் 9-வது முறையாக பதவியேற்கும் முனைப்பில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் சுல்தான்பூரில் உள்ள வாக்குச் சாவடிகளுக்குச் சென்று சனிக்கிழமை பார்வையிட்டார்.
பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மேனகா காந்தி கூறுகையில், "மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இரண்டு, மூன்று இடங்களில் சிறிய சிக்கல்கள் இருக்கிறது.
ஒரு சில வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எங்கள் முகவர்களுக்கும் தெரியாது. அது சில சமயங்களில் வெற்றிகரமாகவும் சில சமயங்களில் இல்லாததை போல. நான் ஜோதிடம் சொல்பவர் அல்ல. ஆனால், ஜூன் 4-ஆம் தேதி வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்" என்றார்.
சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 8 முறையும், பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முறையும், பாஜக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் பிகாரில் 8 இடங்களும், ஹரியாணாவில் 10 இடங்களும், ஜம்மு காஷ்மீரில் ஒரு இடமும், ஜார்க்கண்டில் 4 இடங்களும், தில்லியில் 7 இடங்களும், ஒடிாசாவில் 6 இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 14 இடங்களும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களும் அடங்கும். மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மக்கள் நலன்சாா்ந்ததாகவே எனது முடிவுகள் இருக்கும்: எஸ். காமராஜ் எம்எல்ஏ

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு நிறைவு: 300 இடங்கள் காலி

வார பலன்கள் (ஜூன் 26 - ஜூலை 2) - மகரம்

ஏற்காட்டில் வேன் சக்கரத்தில் சிக்கி மூன்றாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




