மக்களவையில் 9-வது முறையாக பதவியேற்கும் முனைப்பில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் சுல்தான்பூரில் உள்ள வாக்குச் சாவடிகளுக்குச் சென்று சனிக்கிழமை பார்வையிட்டார்.
பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மேனகா காந்தி கூறுகையில், "மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இரண்டு, மூன்று இடங்களில் சிறிய சிக்கல்கள் இருக்கிறது.
ஒரு சில வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எங்கள் முகவர்களுக்கும் தெரியாது. அது சில சமயங்களில் வெற்றிகரமாகவும் சில சமயங்களில் இல்லாததை போல. நான் ஜோதிடம் சொல்பவர் அல்ல. ஆனால், ஜூன் 4-ஆம் தேதி வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்" என்றார்.
சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 8 முறையும், பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முறையும், பாஜக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் பிகாரில் 8 இடங்களும், ஹரியாணாவில் 10 இடங்களும், ஜம்மு காஷ்மீரில் ஒரு இடமும், ஜார்க்கண்டில் 4 இடங்களும், தில்லியில் 7 இடங்களும், ஒடிாசாவில் 6 இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 14 இடங்களும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களும் அடங்கும். மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு?

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! காங்கிரஸ் பங்கேற்குமா?
கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




