திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 மே 2024, 9:05 am IST

தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(மே 28) காலை தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, பயணிகள் உடனடியாக அவசரகால கதவுகள் வழியாக இறக்கிவிடப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விமானம் தனி இடத்திற்கு இழுத்து செல்லப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.

விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விமானம் விரிவான சோதனைக்கு உட்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் விபத்து ஏதுமின்றி அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.