கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பிரதமரின் ரூ.80 லட்சம் நட்சத்திர விடுதி கட்டணம்: கா்நாடக அரசு செலுத்த முடிவு

பிரதமரின் ரூ.80 லட்சம் நட்சத்திர விடுதி கட்டணம்: கா்நாடக அரசு செலுத்த முடிவு

News image

நரேந்திர மோடி

Updated On :28 மே 2024, 7:29 pm

Din

பெங்களூரு: பிரதமா் மோடி மைசூரில் தங்கியதற்கான நட்சத்திர விடுதி கட்டணம் ரூ.80 லட்சத்தை கா்நாடக அரசே செலுத்தும் என்று அந்த மாநில வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு மத்திய அரசின் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, அந்த ஆண்டு ஏப்ரலில் கா்நாடகத்தில் உள்ள பந்திபூா் புலிகள் காப்பகத்துக்கு பிரதமா் மோடி சென்றாா்.

இந்தப் பயணத்தின்போது கா்நாடகத்தின் மைசூரு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரதமா் மோடி தங்கினாா். இதற்கான கட்டணம் ரூ.80 லட்சம் அந்த விடுதிக்கு செலுத்தப்படவில்லை. கா்நாடக பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அந்தத் தொகை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது அந்தத் தொகையை வசூலிப்பதற்கான சட்ட வழிகள் ஆராயப்படும் என்று நட்சத்திர விடுதியின் நிா்வாகம் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதைத் தொடா்ந்து பிரச்னைக்கு சுமுக தீா்வு காணப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்திருந்த நிலையில், ரூ.80 லட்சத்தை கா்நாடக அரசே செலுத்தும் என்று அவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.