இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஒடிஸாவில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 4 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

News image
Updated On :30 மே 2024, 9:14 am IST

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 19 காலை 7 மணிமுதல் ஜூன் 1 மாலை 6.30 வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தடையை மீறி ஒடிஸாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒடிஸா மாநில தேர்தல் ஆணையருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிஸாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் 4 கட்டங்களாக மே 13 முதல் ஜூன் 1வரை நடைபெற்று வருகின்றது. 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒடிஸாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக உள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 112, பாஜக 23, காங்கிரஸ் 9 தொகுதிகளில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.