மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உலகில் மிக மோசமானது சாதிய பாகுபாடு: ராகுல் காந்தி

இந்தியாவின் சாதிய பாகுபாடு உலகில் மிக மோசமானவற்றுள் ஒன்று என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image

ராகுல் காந்தி - PTI

Updated On :5 நவம்பர் 2024, 9:30 pm IST

இந்தியாவின் சாதிய பாகுபாடு உலகில் மிக மோசமானவற்றுள் ஒன்று என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சாதி கணக்கெடுப்பு நாட்டிற்கு முன்மாதிரியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கலந்துகொண்டனர். மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் தொண்டர்கள் முன்பு ராகுல் காந்தி பேசியதாவது, இந்தியாவில் சாதிய பாகுபாடு தனித்துவமானது. உலகின் மிக மோசமானவற்றுள் ஒன்றாகக் கூறலாம். மக்களிடையே 50 சதவீத இடஒதுக்கீடு என்ற செயற்கையான தடையை காங்கிரஸ் தகர்க்கும்.

நாட்டில் தாழ்த்தப்பட்டோர் எத்தனைபேர், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு, பழக்குடி மக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை தெரிந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படுவது ஏன்? நாட்டில் நிலவும் பாகுபாட்டை சரிசெய்ய முயற்சிப்பது குறித்து மோடி பேச மறுப்பது ஏன்?

ஜார்க்கட்ண்டில் பட்டியலினத்தோருக்கு 28 சதவீத இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோருக்கு 12 சதவீதமாக, ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமாக இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என இந்தியா கூட்டணி உறுதி அளித்துள்ளது.

ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் பொருள்கள் 5 கிலோவிலிருந்து 7 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.450ஆக குறைப்போம். மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். ஏழை மக்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

தெலங்கானாவில் நாளை (நவ. 6) தொடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாத இறுதிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.