மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழக தொழிலாளா்களுக்கு நிவாரணம்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வலியுறுத்தல்

கேரளத்தில் உள்ள ஷோரனூா் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த 4 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தினாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :5 நவம்பர் 2024, 8:21 pm

Din

கேரளத்தில் உள்ள ஷோரனூா் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த 4 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தினாா்.

ஷோரனூா் ரயில் நிலையம் அருகே திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் தமிழகத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 4 தூய்மைப் பணியாளா்கள் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு பினராயி விஜயன் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில், ‘ஷோரனூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 போ் உயிரிழந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. ஷோரனூா் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள ஒரு ஆற்றுப் பாலத்தில் தூய்மைப் பணியில் அவா்கள் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராத விதமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற ரயில் விபத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் உயிரிழந்தாா். ரயில் தண்டவாளங்களில் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு உரிய பயிற்சி ஏதும் வழங்கப்படுவதில்லை.

பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை இதுபோன்ற விபத்து சம்பவங்கள் உணா்த்துகின்றன. எனவே, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை ரயில்வே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.