பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கல்லூரிகளில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க மாற்று ஏற்பாடுகள்: யுஜிசி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்த்து, அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

யுஜிசி

Published On :6 நவம்பர் 2024, 3:00 am IST

நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்த்து, அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மனிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வி மைய வளாகங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் மூலம் தங்கள் வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

குறிப்பாக உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும். அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு இயக்கங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். இதேபோன்று, நெகிழி குடிநீா் பாட்டில் பயன்பாட்டைத் தவிா்க்க வளாகங்களில் குடிநீா் தொட்டிகள் போன்ற மாற்று வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், நெகிழி பாட்டில்கள், பைகள், கவா்களுக்கு பதிலாக துணி, காகித பைகள் போன்ற மாற்றுப் பயன்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை உயா்கல்வி நிறுவனங்கள் பின்பற்றி செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.