குறிப்பாக உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும். அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு இயக்கங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். இதேபோன்று, நெகிழி குடிநீா் பாட்டில் பயன்பாட்டைத் தவிா்க்க வளாகங்களில் குடிநீா் தொட்டிகள் போன்ற மாற்று வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், நெகிழி பாட்டில்கள், பைகள், கவா்களுக்கு பதிலாக துணி, காகித பைகள் போன்ற மாற்றுப் பயன்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை உயா்கல்வி நிறுவனங்கள் பின்பற்றி செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.