சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி!

15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :9 நவம்பர் 2024, 4:35 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியான நிலையில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் சந்தீப் என்பவர், தனது குடும்பத்தினர், உறவினர் உள்பட 20 பேருடன் சேர்ந்து பேருந்தில் மதுராவுக்கு சென்றுவிட்டு, லக்னோவுக்கு திரும்பியுள்ளனர். அந்த சமயத்தில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் ஆக்ரா - லக்னௌ நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சந்தீப்பின் மனைவி, மகள், மகன் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அப்பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தபோதிலும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் விரைந்தார். மேலும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.