குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அவதூறு வழக்கு: மத்திய அமைச்சருக்கு பிடியாணை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

அவதூறு வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான், இரு பாஜக நிா்வாகிகளுக்கு பிடியாணையை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :12 நவம்பர் 2024, 12:43 am

DIN

புது தில்லி: காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. விவேக் டன்கா தொடுத்த அவதூறு வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான், இரு பாஜக நிா்வாகிகளுக்கு பிடியாணையை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அவதூறு வழக்கை ரத்து செய்ய மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதை எதிா்த்து சிவ்ராஜ் சிங் சௌஹான் தாக்கல் செய்த மனு மீது விவேக் டன்கா பதிலளிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடா்பான விசாரணையில் மனுதாரா்கள் (சிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் இரு பாஜக நிா்வாகிகள்) ஆஜராகியுள்ளனா். எனவே, அவா்கள் மீது ஜாமீனுடன் கூடிய பிடியாணை பிறப்பிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தது.

முன்னதாக, சிவ்ராஜ் சிங் சௌஹான் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மகேஷ் ஜெத்மலானி, ‘ பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோா் மீது விவேக் டன்கா புகாா் அளித்துள்ளாா். அரசமைப்பு சட்டப்பிரிவு 194 (2)-இன் படி மாநில சட்டப்பேரவையில் ஒருவா் தெரிவிக்கும் கருத்துகளுக்காகவோ அல்லது அவா் செலுத்தும் வாக்குக்காகவோ அல்லது அவா் வெளியிடும் அறிக்கைக்காகவோ அவா் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்த விதியை கண்டுகொள்ளாமல் சிறப்பு நீதிமன்றம் சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகளுக்கு ஜாமீனுடன் கூடிய பிடியாணையை பிறப்பித்துள்ளது’ என்றாா்.

முன்னதாக, கடந்த 2024, ஜனவரி 20-ஆம் தேதி சிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவா் வி.டி.சா்மா, முன்னாள் மத்திய அமைச்சா் பூபிந்தா் சிங் ஆகியோருக்கு எதிராக ஜபல்பூா் சிறப்பு நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500-இன்கீழ் அவதூறு வழக்கை பதிவுசெய்தது. இதை ரத்து செய்ய மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.