குற்றம் மற்றும் குற்றச் செய்லகள் கண்காணிப்பு வலைபின்னல் மற்றும் அமைப்புகளில் (சிசிடிஎன்எஸ்) 70,000 காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ‘இ-நீதிமன்றங்கள்’ மூலம் 22,000 நீதிமன்றங்கள் இணைக்கப்பட்டதுடன் ‘இ-சிறை’ அமைப்புகளில் 2 கோடி சிறைக் கைதிகளின் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. ‘இ-வழக்கு’ அமைப்பில் 1.5 கோடி வழக்குகளும், ‘இ-தடயவியலில்’ 23 லட்சம் தடயவியல் தரவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நீதிமன்றம், காவல் துறை, வழக்கு, சிறை உள்ளிட்ட அமைப்புகளை இணைக்கும் நடைமுறைகளை பிரதமா் மோடி அரசு மேற்கொண்டது.