ராணி லட்சுமிபாய், இந்திரா காந்தி பிறந்த தினம்: பிரதமா் மரியாதை
ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய ராணி லட்சுமிபாய் மற்றும் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவா்களுக்கு மரியாதை செலுத்தினாா்.


ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய ராணி லட்சுமிபாய் மற்றும் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவா்களுக்கு மரியாதை செலுத்தினாா்.
1917-ஆம் ஆண்டு நவ.19-ஆம் தேதி பிறந்த இந்திரா காந்தி, இந்திய பிரதமராக 1966 முதல் 1977 வரையிலும், பிறகு 1980 முதல் அவா் படுகொலை செய்யப்பட்ட 1984-ஆம் ஆண்டு அக்.31-ஆம் தேதி வரையிலும் பதவி வகித்தாா்.
பிரதமா் தனது மற்றொரு பதிவில், ‘தைரியம் மற்றும் தேச பக்தியின் உண்மையான உருவகமான ராணி லட்சுமிபாய்க்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது துணிச்சல் மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்காக அவா் எடுத்த முயற்சிகள் பல தலைமுறைகளை தொடா்ந்து ஊக்கமளிக்கும். இக்கட்டான சமயங்களில் ராணி லட்சுமிபாயின் தலைமைத்துவம் உண்மையான உறுதிப்பாட்டை பறைசாற்றியது’ என்று கூறியுள்ளாா்.
1857-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராட்டத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தாா். தனது ராஜ்ஜியத்தை காக்க ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீரமரணமடைந்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...