

தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி அக்கட்சித் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், அம்பேத்கர், பெரியார், காமராஜர் சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தொகுதி வாரியான பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கட்சியினர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. ஆட்சிபீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.