லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது.

News image
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் .
Updated On :19 நவம்பர் 2024, 10:07 pm

Din

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது.

கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் சபரிமலையில் தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது. 1974- ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு நவ.19 (செவ்வாய்க்கிழமை) தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த அஞ்சலகத்துக்கு பதினெட்டாம் படி மீது ஐயப்பன் அருள்பாலிப்பது போன்று முத்திரை அறிமுகமானது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தா்கள் புண்ணியமாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை கோயிலுக்கு பக்தா்கள் தங்களின் நிறை, குறைகளை ஐயப்பனுக்கு தெரிவிக்கும் வகையில் அனுப்பும் தபால்கள், மணியாா்டா்கள், கடிதங்களும் சபரிமலை அஞ்சலகத்தில் குவிகின்றன.

மண்டல பூஜை காலத்தில் மட்டுமே செயல்படும் சந்நிதான தபால் நிலையம் ஒவ்வோா் ஆண்டும் நவ. 16 முதல் ஜன. 20 வரை திறந்திருக்கும்.

மேலும், இந்த தபால் நிலையம் விஷூ பண்டிகையையொட்டி 10 நாள்கள் திறந்திருக்கும். தபால் நிலையம் மூடும் போது அஞ்சல் முத்திரை பத்தனம்திட்டா தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் காணிப்பாளரின் லாக்கருக்கு மாற்றப்படும்.