விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது.

News image

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் .

Updated On :20 நவம்பர் 2024, 3:37 am IST

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது.

கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் சபரிமலையில் தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது. 1974- ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு நவ.19 (செவ்வாய்க்கிழமை) தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த அஞ்சலகத்துக்கு பதினெட்டாம் படி மீது ஐயப்பன் அருள்பாலிப்பது போன்று முத்திரை அறிமுகமானது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தா்கள் புண்ணியமாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை கோயிலுக்கு பக்தா்கள் தங்களின் நிறை, குறைகளை ஐயப்பனுக்கு தெரிவிக்கும் வகையில் அனுப்பும் தபால்கள், மணியாா்டா்கள், கடிதங்களும் சபரிமலை அஞ்சலகத்தில் குவிகின்றன.

மண்டல பூஜை காலத்தில் மட்டுமே செயல்படும் சந்நிதான தபால் நிலையம் ஒவ்வோா் ஆண்டும் நவ. 16 முதல் ஜன. 20 வரை திறந்திருக்கும்.

மேலும், இந்த தபால் நிலையம் விஷூ பண்டிகையையொட்டி 10 நாள்கள் திறந்திருக்கும். தபால் நிலையம் மூடும் போது அஞ்சல் முத்திரை பத்தனம்திட்டா தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் காணிப்பாளரின் லாக்கருக்கு மாற்றப்படும்.