ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவியாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தொடக்க நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
அரசியலமைப்பு நாளையொட்டி எக்ஸ் தளத்தில் விடியோ பகிர்ந்துள்ள ராகுல் காந்தி தெரிவித்ததாவது:
“அனைவருக்கும் அரசியலமைப்பு நாள் வாழ்த்துகள். நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும். ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்க அரசியலமைப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அரசியலமைப்பு எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக நம் நாடு இருக்கும்.
இந்த நாளில், அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், போராளிகள் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை மீண்டும் ஏற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : அரசியலமைப்பு மூலம் சமூக நீதியை அடைந்துள்ளோம்: குடியரசுத் தலைவர்
இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
à¤à¤ª सà¤à¥ à¤à¥ सà¤à¤µà¤¿à¤§à¤¾à¤¨ दिवस à¤à¥ हारà¥à¤¦à¤¿à¤ शà¥à¤à¤à¤¾à¤®à¤¨à¤¾à¤à¤à¥¤
— Rahul Gandhi (@RahulGandhi) November 26, 2024
हमारॠसà¤à¤µà¤¿à¤§à¤¾à¤¨ à¤à¥ मà¥à¤² à¤à¤¾à¤µà¤¨à¤¾ यह हॠà¤à¤¿ नà¥à¤¯à¤¾à¤¯ à¤à¤° à¤à¤§à¤¿à¤à¤¾à¤° सà¤à¥ à¤à¥ लिठà¤à¤ समान हà¥à¤¨à¥ à¤à¤¾à¤¹à¤¿à¤à¥¤ सà¤à¥ à¤à¥ सà¥à¤µà¤¾à¤à¤¿à¤®à¤¾à¤¨ à¤à¥ साथ à¤à¥à¤¨à¥ à¤à¤¾ à¤à¤µà¤¸à¤° मिलना à¤à¤¾à¤¹à¤¿à¤à¥¤
सà¤à¤µà¤¿à¤§à¤¾à¤¨ समाठà¤à¥ सबसॠà¤à¤¼à¤°à¥à¤¬ à¤à¤° à¤à¤®à¤à¤¼à¥à¤° वरà¥à¤à¥à¤ à¤à¥ रà¤à¥à¤·à¤¾ à¤à¥ लिठà¤à¤ शà¤à¥à¤¤à¤¿à¤¶à¤¾à¤²à¥ à¤à¤à¤¾à¤° हà¥à¥¤ यह à¤à¤¿à¤¤à¤¨à¤¾ मà¤à¤¬à¥à¤¤â¦ pic.twitter.com/dkvKeMtruV
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!

மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



