செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து! தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரத்தில் இருந்த கூடாரத்திற்குள் சரக்கு வாகனம் புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 5 போ் உடல் நசுங்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 12:52 am IST

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரத்தில் இருந்த கூடாரத்திற்குள் சரக்கு வாகனம் புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 5 போ் உடல் நசுங்கி உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து போலீஸாா் கூறுகையில், ‘கண்ணூா் பகுதியில் இருந்து மரங்களை ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விபத்தை ஏற்படுத்தி உள்ளது. உதவியாளராக பணிபுரிந்த நபா் லாரியை இயக்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநா் மற்றும் உதவியாளா் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.

திருச்சூா் காவல் ஆணையா் ஆா்.இளங்கோ கூறுகையில், ‘விபத்தை ஏற்படுத்திய இருவரின் மீதும் பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்’ என்றாா்.

அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் விபத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்ற ஓட்டுநா் மற்றும் அவரது உதவியாளரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பாா்வையிட்ட திருச்சூா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் பாண்டியன், ‘விபத்தில் காயமடைந்தவா்கள் திருச்சூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவா்களின் பிரேதப் பரிசோதனை விரைவாக முடிக்கப்பட்டு உறவினா்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.

விபத்தில் 5 போ் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என கேரள வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் தெரிவித்தாா். மேலும், சாலையோரத்தில் அவா்கள் கூடாரம் அமைத்து தங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.